Type Here to Get Search Results !

சம்பளம் படியாததால் உதயநிதிக்கு நோ சொன்ன சிவகார்த்திகேயன்!!





சென்னை: கேட்ட சம்பளத்தைத் தரத் தயங்கிய உதயநிதி ஸ்டாலின் படத்தை வேண்டாம் என சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் யார் நிலை எப்போது எப்படி மாறும் என்றே தெரியாது.

 சில மாதங்களுக்கு முன்புவரை, ஏதாவது ஒரு வாய்ப்பு வந்தால் போதும் என்று காத்திருந்த சிவகார்த்திதேயன் இப்போது பரபரப்பான நட்சத்திரமாக மாறியுள்ளார்.

 கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று தொடர்ந்து மூன்று ஹிட் படங்களில் நடித்த சிவகார்த்திகேயனின் சம்பளம் இப்போது ரூ 5 கோடி என்கிறார்கள்.


 ஆனால் சிவகார்த்திகேயனோ, கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்.. ரேட் பேசுவதெல்லாம் கிடையாது என்று கூறி வருகிறார். 


இந்த நிலையில், தனக்காக ஒரு படம் நடித்துத் தருமாறு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டாராம். சரி என்று கூறி சம்பளம் பேசியுள்ளார் சிவகார்த்தி. 


2 கோடி வரை தருவதாகக் கூறினாராம் உதயநிதி. ஆனால் அதற்கு ஒப்புக் கொள்ளாத சிவகார்த்திகேயன், நான்கு கோடிக்கு வேண்டுமானால் சம்மதிக்கிறேன். இல்லாவிட்டால் நடிக்க முடியாது, என கறாராகக் கூறி வாய்ப்பை உதறிவிட்டதாகக் கூறுகிறார்கள். 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.