மதுரையை களமாகக் கொண்டு உருவான இந்தப் படத்துக்கு பெரும் வெற்றி கிட்டியது. இந்தப் படம் தெலுங்கிலும் தயாரானது. இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் அழுத்தமான திரைக்கதைதான். இந்தத் திரைக்கதை புத்தகமாக சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இப்போது அதன் ஆங்கில வடிவம் புத்தகமாக வெளியாகியுள்ளது.
சுப்பிரமணியபுரம் திரைக்கதையின் ஆங்கில வடிவம் வெளியீடு! இதன் முதல் பிரதியை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட, சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். விழாவில் இயக்குநர் சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்பட பலரும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.