தாலி கட்டிக் கொள்ளாமலேயே குடும்பம் நடத்திக் கொள்ளும் கலாச்சாரம் பாலிவுட்டில் இருந்து தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பரவியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என சித்தரிக்கப்பட்ட பெல் நடிகை, தனது சொந்த குரலில் பேசி பருத்தி வீரனுடன் சண்டை போட்டு தேசிய விருதை பெற்று பெரிய நடிகையாக உருவெடுத்தார். அடுத்து இவரது சில படங்கள் தோல்வியை தழுவ, தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் முடங்கிப் போயுள்ளார்.
தமிழில் வாய்ப்பில்லாமல் போனவர் தெலுங்கு பக்கம் போனார். அங்கேயும் வாய்ப்பு இல்லாமல் முடங்கிப் போனார். இந்நிலையில் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் மகனுடன் காதல் ஏற்பட்டு அவருடன் தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்தி வருகிறாராம். இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிற அளவுக்கு இவர்களது அன்யோன்யம் வளர்ந்துள்ளதாம்.