Type Here to Get Search Results !

சிவா நீ வாயை மூடு எல்லாம் எங்களுக்கு தெரியும்; ஆவேசமடைந்த தனுஷ்


நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் தனுஷ் – சிவகார்த்திகேயன். எதிர் நீச்சல் படத்திற்கு பிறகு சில காலமாக தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு இடையே ஒருவித பனிப்போர் நடைபெற்று வந்தது. தற்பொழுது அந்த பனிப்போர் எரிமலையாக வெடித்துள்ளது.

சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படத்தின் விளம்பரங்கள் குறித்தும் அவ்வப்போது, சில யோசனைகளையும் தெரிவிப்பது வழக்கம். காரணம் தன் வெற்றியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பே. அதிலும் சிவகார்த்திகேயனின் முக்கிய யோசனையாக தன்னுடைய படங்கள், அனைத்து ஆங்கில நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் வெளிவரவெண்டும் என்பது. மான் கராத்தே படத்தின் போதே கவனித்திருப்பீர்களே இந்த கொள்கையை மட்டும் அவர் தளர்த்திக் கொள்வதே இல்லையாம்.

இந்தநிலையில் தற்போது தனுஷ் தயாரிப்பில் டாணா படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படம் விரைவில் வெளிவர உள்ளநிலையில் எப்படி எல்லாம் படத்துக்கு பப்ளிசிட்டி செய்ய வேண்டும் என்ற தனது வழக்கமான கோரிக்கையை டாணா படத்தின் இயக்குனர் செந்தில்குமாரிடம் சொல்லி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த விஷயத்தை படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் தனுஷிடம் கூறினாராம் இயக்குநர்.

சிவகார்த்திகேயன் இப்படி கண்டிஷன் போட்டது தனுஷுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம். இதனால் கடுப்படைந்த அவர் நடிப்பதோடு நிறுத்திக் கொள் சிவா,  வாயை மூடிட்டு இரு படத்தோட விளம்பரம் வியாபாரம் எல்லாம் நாங்க பாத்துக்கிறோம் என அவேசமாக கூறியுள்ளார் தனுஷ்.

தனுஷிடம் இருந்து எதிர்பார்க்காத இந்த பதிலால், சிவகார்த்திகேயன் மிகவும் மனம் நொந்துபோயுள்ளார். இது தான் சந்தர்ப்பம் என மீண்டும் தீயை பற்ற வைக்க தொடங்கி விட்டனர் சில கருப்பு ஆடுகள். 25 படங்கள் நடித்த தனுஷுக்கு தெரியாதா படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும் என்று, என சில கோலிவுட் கருப்பு ஆடுகள் அனைவர் காதிலும் பற்ற வைத்துவிட்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.