இளம் நடிகர் ஒருவரின் ரகளையால் கலகலத்துப் போயிருக்கிறது எம்ஆர்சி நகரில் உள்ள அந்த புத்தம் புதிய ஏழு நட்சத்திர ஹோட்டல்.
வரிசையாக வெற்றியை ருசித்து அடுத்து ரம்மி அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் அவர். ஆனால் மனிதர் உற்சாக பானத்தில் இறங்கிவிட்டால் அவ்வளவுதான், ரகளையில் இருக்கும் ஏரியாவையே ரணகளமாக்கிவிடுவார்.
வெளிநாடுகளுக்குப் போனாலோ கேட்கவே வேண்டாம். நள்ளிரவு, அதிகாலை என்ற நேரம் காலமெல்லாம் கிடையாது.
சமீபத்தில் ஒரு சேனலின் தொடக்கவிழா விருந்துக்கு அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார் நடிகர். விருந்து ஆரம்பித்ததிலிருந்தே சரக்கில் மூழ்க ஆரம்பித்தவர், ஒரு கட்டத்தில் ஹோட்டல் ரிசப்ஷனில் வைத்தே சாப்பாடு, சிக்கன் சாப்பிட்டாராம்.
போதையின் உச்சத்தில் கையிலிருந்தவற்றையெல்லாம் ரிசப்ஷன் முழுக்க வீச ஆரம்பிக்க திணறிப் போனார்களாம் ஹோட்டல்காரர்கள்.
அவரை அங்கிருந்து வெளியேற்றினால் போதும் என்ற நிலைக்குப் போய்விட்டதாம் நிலைமை.