Type Here to Get Search Results !

அருள்நிதிய நினைச்சு ஆரம்பத்துல பயந்தேன்- பள பளப்பா திரும்பியிருக்கும் பூர்ணா பேச்சு




அருள்நிதியை நினைத்து ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. ஆனா பழகின பிறகுதான் அவர் குழந்தை மனசுக்காரர்னு புரிஞ்சது, என்றார் நடிகை பூர்ணா. மவுன குரு படத்துக்குப் பிறகு அருள்நிதி - பூர்ணா நடிக்கும் படம் தகராறு. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்தப் படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பூர்ணா பேசுகையில், "இதுவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் பெரிய பட்ஜெட், பெரிய கம்பெனி படம்.

இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க முக்கிய காரணம் நடிகை பூஜா. அவங்க நடிக்க வேண்டிய ரோல். அவங்க நடிக்க முடியாததால என்னை பரிந்துரைத்தார். அவருக்கு நான் சொல்லியாக வேண்டும். ஹிட் படத்தில நடிக்கலையேன்னு என்னைப் பார்க்கும் ரிப்போர்ட்டர்ஸ் கேட்பாங்க. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் இந்தப் படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு அருமையான வேடம்.

இந்தப் படத்தோட ஷூட்டிங்குக்கு முதல்நாள் வந்தபோது எனக்கு கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்துச்சி. காரணம் ஹீரோ அருள்நிதி. பெரிய குடும்பத்திலிருந்து வந்திருப்பவர். அதையெல்லாம் நினைத்து பயப்பட்டேன். ஆனால் அவருடன் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் அவர் எந்த அளவு குழந்தை மனசுக்காரர்னு புரிஞ்சிக்கிட்டேன்.

இந்தப் படத்துல என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் ஒரு சிரிப்பு சிரிப்பார்.. அது அவ்வளவு க்யூட்டா இருக்கும்.. தயவு செஞ்சி அதை நீங்க பார்க்கணும்," என்றார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.