Type Here to Get Search Results !

தன்யா பாலகிருஷ்ணன் : மறந்த,மழுங்கிய தமிழர்கள்



கிரிக்கெட் போட்டியின் போது பெங்களுரு சென்னை அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் பெங்களுரு தோல்வியுற்ற சில நிமிடங்களில் தனது சமுக வலை பக்கமான ட்விட்டர் மற்றும் முகனூலில் [FB], தமிழர்கள் என்றும் பிச்சை எடுப்பவர்கள் , கன்னடவர்களிடம் என்றும் பிச்சை எடுப்பவர்கள் தமிழர்களே , இதுவரை நம்மிடம் தண்ணி கேட்டு பிச்சை எடுத்தார்கள் , மின்சாரம் கேட்டு பிச்சை எடுத்தார்கள் தமிழர்கள் , இப்பொழுது விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுவதற்கு கூட பிச்சை எடுக்கிறார்கள் , தமிழர்களுக்கு பிச்சை எடுப்பதில் வெட்கம் இல்லையே என்ற கேள்வியும் அந்த கன்னட அம்மணி கேட்டுள்ளது .

 நாம் என்று கன்னடர்களிடம் மின்சாரத்திற்கு அவர்களிடம் பிச்சை எடுத்தோம் என்று தெரியவில்லை .மேலும் அவள் கூறியதாவது எங்கள் ஊர் பெங்களூரை தமிழர்கள் எங்களது இடங்களை அபகரித்துக்கொண்டு பெங்களூரின் அழகை அசிங்கபடுத்தி கெடுத்துவிட்டார்கள் தமிழர்கள் என்கிறாள் இந்த அம்மணி .


 இப்படியே தனது பதிவை சமுக தளத்தில் பொரித்த அம்மணிக்கு மறுநாள் சென்னையில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ் தேசிய அமைப்புகளும் எதிர்ப்பை அறிந்த அம்ம்மணி தன்யா பாலகிரிஷ்ணன் பயந்து இரவோட இரவாக பெங்களுருக்கு பறந்தது .

பின்னர் இச்செய்தி முகனூலில் காட்டுத் தீபோல் பரவியது , எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில் நொண்டி மன்னிப்பு தெரிவித்துவிட்டு இனி தமிழ்நாட்டு படங்களில் நான் நடிக்க போவதில்லை என்று அறிவித்தார் . பின்னர் என்ன..... காலங்கள் மாதங்கள் கழிந்தன சத்தமே இல்லாமல் தன்யா பாலகிருஷ்ணன் " ராஜா ராணி " என்ற படத்தில் நடித்து இன்று திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன .என்றும் நம் தமிழர்களுக்கு ஓர் குணம் உண்டு எவற்றையும் உடனே மறந்து விடுவது .


நேற்று ஒருத்தி தமிழர்களை பார்த்து தமிழர்கள் என்று பிச்சை எடுப்பவர்கள் என்றால் . நாளை ஒருத்தி தமிழர்களை பார்த்து தேவிடியா பய என்று சொல்வதற்கு நேரமாகாது . தொடக்கத்தில் சில எதிர்ப்புகள் இருந்தாலும் பிறகு மழுங்கிய நிலைக்கு தமிழர்கள் செல்வார்கள் என்ற உண்மையே இவ்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது .

ராஜா ராணி திரைப்பட இயக்குனர் புதிதாக வந்திருக்கும் இளைய இயக்குனர்களில் ஒருவர் , அவர் பெயர் "அட்லி" இவ்விடையங்கள் தமிழ் இயக்குனரான அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை .

இருந்தும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது சற்று வருத்தமே . இத்தருணத்தில் நமது எதிர்ப்பை நாம் தெரிவிக்காமல் இருந்தால் இன்று இயக்குனர் "அட்லி" தன்யா பாலக்ரிஷணனை வைத்து படம் எடுத்தது போல் நாளை "இயக்குனர் அட்லி" போன்ற ஓர் "இயக்குனர் இட்லி " வந்து இனபடுகொலை செய்த ராஜபக்ஷே மகனை வைத்து படம் எடுக்க கூடும் , எடுப்பார்கள் .

ஆகவே நல்ல முறையில் நமது எதிர்ப்பை அந்த இயக்குனருக்கும் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் . தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று வசை பாடிய அம்மணி இன்று என்ன செய்து கொண்டு இங்கு தமிழகத்தில் பிச்சை எடுக்கிறாள் என்று தெரியவில்லை .தமிழ்நாட்டில் இருக்கும் 8 கோடி தமிழர்களில் எத்தனை பேர் உணர்வு பெறுகிறார்கள் அல்லது மழுங்கிய நிலைக்கு செல்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.