Type Here to Get Search Results !

சிம்புவை தொடர்ந்து இமயமலைக்கு போன நயன்தாரா






சென்னை:பக்தி முத்தியதால் இமயமலைக்கு சென்றார் நயன்தாரா.சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் முறிவு ஏற்பட்டதையடுத்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. மீண்டும் நடிக்க வந்தபிறகு மொழி மற்றும் ஹீரோ பேதம் பார்க்காமல் நடித்து வருகிறார். சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு‘ படத்தில் மீண்டும் சிம்பு ஜோடியாக நடித்தார். இதையடுத்து உதயநிதியுடன் ‘நண்பேன்டா‘ படத்திலும் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக புதிய படத்திலும் நடிக்கிறார்.

சமீபத்தில் ராஜா பட ஷூட்டிங்கிற்காக டேராடூன் சென்றார். அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளுக்கு சென்ற நயன்தாரா, கோயில்களுக்கு நடந்து சென்று பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டார். லக்ஷ்மண் ஜுலா, சப்தா ரிஷி ஆஷ்ரம், நீல்காந்த் மாதேவ் மற்றும் சபத் சரவோர் போன்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டார். ஏற்கனவே ரஜினி இமயமலைக்கு சென்று தியானம் செய்வது வழக்கம். சமீபத்தில் மன அமைதி தேடி இமயமலை சென்றார் சிம்பு. அவரைத் தொடர்ந்து நயன்தாராவும் இமயமலை சென்றிருக்கிறார்.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.