நீண்ட நாட்களாக அஜித்தின் கால் சீட்டிற்காக கால்கடுக்க நின்று ஏமாற்றமடைந்த குஷ்பு, தற்பொழுது புதிய கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணிக்கு அஸ்திவாரம் அமைத்ததே குட்டி குஷ்பு என அழைக்கப்படும் ஹன்சிகா தான். அஜித்தின் கால்சீட் கிடைக்கவில்லை என விரக்தியில் இருந்த குஷ்புவிற்கு சிவகார்த்திகேயன் படத்தை நீங்கள் தயாரிக்கலாமே என குஷ்புவிற்கு ஊக்கம் கொடுத்துள்ளார் ஹன்சிகா. அதோடு மட்டுமல்லாமல் ஹன்சிகாவே சிவாவிடம் கால்சீட்டும் வாங்கிகொடுத்துள்ளார். ஹன்சிகா கேட்ட உடனே சிவகார்த்திகேயனும் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் ஒரு சிறிய நிபந்தனையையும் வைத்துள்ளார் சிவா. அதாவது, இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க வேண்டும் என கூறியுள்ளார். உடனே பெரிய குஷ்பு ஏ.ஆர்.ரகுமானிடம் விசயத்தை சொல்ல கண்டிப்பா பண்ணுறோம்னு சொல்லியுள்ளார். மனக்கஷ்டத்தில் இருந்த குஷ்புவிற்கு ஒரே நாளில் இன்ப அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாம். இதனால் ஹன்ஷிகாவையே இந்த படத்தில் நாயகியாக்கிவிட்டார் குஷ்பு. இந்த படத்தை சுந்தர்.சி தான் இயக்க உள்ளார். இதுவரை பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் தற்பொழுது சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க காரணம், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய உருக்கமான பேச்சுதான் அதற்கு காரணம். மறைந்துவிட்ட தன் தந்தைக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை, நான் அவருக்கு செய்தது ஒன்று மட்டும் தான் கொல்லி மட்டும் தான் வைத்தேன் என கண்ணீர் மல்க கூறினார். இது நிகழ்ச்சியில் இருந்த அனைவரையுமே கண்கலங்க வைத்தது. ஏ.ஆர் ரகுமானும் கண்ணீர் வடித்துவிட்டார். இதன் காரணமாகத் தான் ஏ.ஆர்.ரகுமான் ஓகே என ஒற்றை வார்த்தையில் தன்னுடைய பதிலை குஷ்புவிடம் தெரிவித்திருப்பார் என தெரிகிறது.