பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஹிருத்திக் ரோஷன். பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர் கதாநாயகனாக உயர்ந்து தற்போது ஒரு முன்னணி பாலிவுட் நடிகராக நிலைபடுத்திக் கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளியான க்ரிஷ் (2006), தூம் 2 (2006) மற்றும் ஜோதா அக்பர் (2008) ஆகிய படங்கள் இந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் பெறும் வெற்றிபெற்றது. இதில் ‘ஜோதா அக்பர்’ இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றி பெற்றதுடன் இந்த படத்திற்காக அவருக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது. தற்போது ஹிருத்திக் ரோஷன் ‘பாங்க் பாங்க்’ என்னும் இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ‘கத்ரினா கைப்’ நடித்து வருகிறார். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரிலீஸ் செய்கின்றனர். அதிக பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளதால் பிற மொழிகளில் வெளியிடுகின்றனர். சமீபத்தில் வெளியான ஹிருத்திக்கின் ‘கிரிஷ் 3’ படம் தமிழில் வந்து கணிசமான வசூல் ஈட்டியது. எனவே இப்படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடவுள்ளனர்.