Type Here to Get Search Results !

சாதித்த ‘அரிமா நம்பி’


சமீபத்தில் வெளியான ‘அரிமா நம்பி’  படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்துள்ள அரிமா நம்பி படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறியதாவது: கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் என்றாலே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். காரணம், பிரமாண்ட படங்களை அவர் தருவார். இந்த படத்துக்கும் அதே போல் எதிர்பார்ப்பு இருந்தது. அதை இந்த படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. திரையிட்ட எல்லா தியேட்டர்களிலும் இந்த படம் நல்ல வசூலை தந்துள்ளது.  சென்னையில் முதல் வாரத்தில்  மட்டும் 1 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளது. சென்னை புறநகர் பகுதி ஏரியாவில் முதல் 2 வாரத்தில் ரூ.2.31 கோடி வசூலித்து புது சாதனை படைத்துள்ளது. பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக இந்த படம் வசூலை ஈட்டியுள்ளது. இதற்கு படத்தை கலைப்புலி தாணு திறம்பட புரமோட் செய்த விதமும் ஒரு காரணம். இவ்வாறு வினியோகஸ்தர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.