மும்பை: சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க முடியாது என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து கேள்விப்பட்ட பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஓ நோ! அடிமையாதல் என்பதன் அர்த்தம் திடீர் என்று புரிந்துள்ளது. என்னுடையது மாஸ்டர். சச்சின் இல்லாமல் கிரிக்கெட் பார்ப்பது? தாங்க முடியவில்லை. சச்சின் ஓய்வு பெறுவதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் இதே போன்று இருக்குமா? உங்களின் கருத்துகளை தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.