சென்னை: நயன நடிகையை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய சென்றால் அவர் இரண்டு விரல்களை காட்டுகிறாராம். நயன நடிகை நடிப்புக்கு லீவு விட்டு மீண்டும் வந்த பிறகும் அவரது மார்க்கெட் மட்டும் ஏறுமுகமாகவே உள்ளது. காரணம் அவரது தொழில் திறமை. அவருடன் நடிக்க இளம் ஹீரோக்கள் எல்லாம் மிகவும் ஆவலாக உள்ளனர்.
இப்படி ஹீரோக்கள் நயன நடிகையுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதை அறிந்து இயக்குனர்களும் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விருப்பமாக உள்ளனர். தனது மார்க்கெட் மிகவும் பலமாக உள்ளது என்பதை அறிந்து வைத்துள்ள நடிகை சம்பளத்தில் மட்டும் கறாராக இருக்கிறாராம்.
அதேநேரம் ஹீரோ யார் என்றெல்லாம் பார்ப்பதில்லையாம். தனக்கு வாய்ப்பு அளிக்க வருபவர்களிடம் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறராம்.
அம்மணி அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த பிறகு தான் ரூ. 2 கோடி கேட்கிறாராம். தயாரிப்பாளர்களும் கேட்ட பணத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்கிறார்களாம். அது சரி மார்க்கெட் உள்ள போது தானே சம்பாதிக்க முடியும்!